யாழ். பலாலி விமான நிலையம் 17 ஆம் திகதி திறப்பு விழா !!

1 d 2
1 d 2

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச விமான நிலையமாக ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதலாவது விமானம் சென்னையிலிருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பலாலி விமானம் திறக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் வழமையான விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டதன் பின்னர், அங்கு உருவாகியுள்ள தொழில் வெற்றிடங்களுக்கு தெற்கு இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

வடக்கில் தமிழ் பேசும் பலர் வேலையற்று இருக்கும் நிலையில், மாற்று மொழி பேசக் கூடியவர்களை பணியில் அமர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி விசனத்துக்குரியது எனவும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.