சஜித் இன்று ஏழு பொதுக் கூட்டங்களில் பங்கேற்பு

7 ad
7 ad

புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று ஏழு பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளதாக அக்கூட்டணி அறிவித்துள்ளது.

இதன்படி, காலை 9.00 மணிக்கு தரணியகலையிலும், பிற்பகல் 2.00 மணிக்கு ருவன்வெல்லயிலும், பிற்பகல் 2.30 மணிக்கு அத்தனகல்லை தொகுதியிலும், பிற்பகல் 3.00 மணிக்கு மீரிகமயிலும், பிற்பகல் 4.00 மணிக்கு தம்பதெனியவிலும், இரவு 7.30 மணிக்கு குருணாகலையிலும் இடம்பெறும் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன், இன்று காலை 11.00 மணிக்கு ருவன்வெல்லயில் நடைபெறவுள்ள தமிழ் முற்போக்கு குழுவினால் நடாத்தப்படவுள்ள மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.