தேர்தல் குறித்து யாழில் ஆராய்வு!

20200716 151406 1
20200716 151406 1

நாடாளுமன்றத் தேர்தலை சுகாதார நடைமுறைகளுடன் நடத்துவது தொடர்பான முன்னேற்பாட்டு கூட்டம் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ். மாவட்ட செயலகத்தில், இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

வாக்களிப்பு நிலையங்களை ஓகஸ்ட் முதலாம் திகதியே தேர்தல்கள் திணைக்களம் பொறுப்பேற்கும். கிருமி தொற்று நீக்கம் செய்யப்படும், அத்துடன் சுகாதார நடைமுறைகளுடன் தேர்தல் தினத்தன்று மக்கள் வாக்களிக்கும் வசதிகள் செய்யப்பட்டு, ஓகஸ்ட் 5 ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறும்.

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ. அமல்ராஜ் மற்றும்
யாழ். மாவட்டத்திற்குட்பட்ட உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.