கொரோனாவை தடுக்க வடக்குக்கு உபகரணங்கள்!

04
04

கொரோனா பரவலை கட்டுப்படுத்தல், தடுப்பு நடவடிக்கைகளுக்காக வடக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளுக்கு ஒரு கோடி ரூபா பெறுமதியான உபகரணங்கள் இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

ஐ. நா. அபிவிருத்தித் திட்டம் அன்பளிப்பு செய்த இந்த உபகரணங்களை வடக்கு ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் வழங்கி வைத்தார்.

உள்ளூராட்சி திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் “உள்ளூராட்சி மன்றங்கள் தமது அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் மக்களின் பல பிரச்னைகளை தீர்க்க முடியும்” என்று வடக்கு ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.