ஒன்றரை வயதுக் குழந்தையையும் விட்டுவைக்காத காமுகன்; தாய், காதலன் உட்பட மூவர் கைது

44453
44453

ஒன்றரை வயது பெண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக தாயின் காதலரையும் குழந்தையின் தகவலை மறைக்க உடந்தையாக இருந்தமைக்காக தாயையும் நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு, பெரியமுல்ல பிரதேசத்தில் இந்த கொடூரம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,

கடந்த 13 ஆம் திகதி நீர்கொழும்பு – பெரியமுல்ல பாலம் அருகில் குற்றுயிராகக் கிடந்த குழந்தையை பொலிஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

குழந்தை பாலத்தில் இருந்து வீசப்பட்டமையால் சுவருடன் மோதி தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

ஆனால், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. இந் நிலையில் குழந்தையின் பிரதே பரிசோதனையில் அது துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரிய வந்தது. விசாரணையில் தாயுடன் கள்ளக் காதல் கொன்டிருந்த 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.  பின்னர் தாயும், கள்ளக் காதலனின் சகோதரர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.