கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் நங்கூரமிடப்பட்ட கப்பல்களில் பணியாற்றுவதற்காக 55 வெளிநாட்டு மாலுமிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
மூன்று விமானங்களின் மூலமாக இவர்கள் கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமானங்களை வந்தடைந்துள்ளனர்.
அதன்படி இன்று அதிகாலை 1.45 மணிக்கு தோஹாவிலிருந்து கட்டார் எயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான கியூ.ஆர் – 668 என்ற விமானத்தில் 26 வெளிநாட்டு மாலுமிகள் பண்டாரநாயக்க, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும், தோஹாவிலிருந்து கட்டார் எர்வேஸ் விமானம் கியூஆர் -6600 என்ற விமானமும் அதிகாலை 1.00 மணியளவில் 08 வெளிநாட்டு மாலுமிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
நேற்றிரவு 7:16 மணிக்கு இந்தியாவின் சென்னையிலிருந்து இன்டிகோ எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 6E9115 என்ற சிறப்பு விமானம் மூலம் 21 வெளிநாட்டு மாலுமிகள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.