உலகில் உள்ள வல்லரசு நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இலங்கையில் சிறந்த முறையான வழிகாட்டல்கள் மற்றும் அவை பின்பற்றப்படும் விதம் காரணமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முறையாக வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த முடிந்துள்ளதாகவும் உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வெற்றிகரமான முறை பின்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கந்தக்காடு புனர்வாழ்வு மத்தியநிலையத்தை சூழவுள்ள சகலரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.