எதிர்வரும் தேர்தலின் பின் அரசாங்கம் இராணுவ ஆட்சியை ஸ்தாபித்து, நாட்டு மக்களுக்கு சுதந்திரமாக சுவாசிக்கக் கூட சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்காத நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாரு தெரிவித்துள்ளார், அவர் மேலும் தெரிவித்ததாவது,
எதிர்வரும் தேர்தலின் பின்னர் அரசாங்கம் இராணுவ ஆட்சியை ஸ்தாபித்து, நாட்டு மக்களுக்குச் சுதந்திரமாக சுவாசிக்கக் கூட சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்காத நிலைமை ஏற்படும்.
நாட்டை மாத்திரமின்றி தங்களை பாதுகாப்பார்கள் என்று கருதியே 69 இலட்சம் பேர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு பெற்றுக் கொடுத்திருந்தனர்.
தேர்தல் காலத்தில் ராஜபக்ஷாக்களின் பிரசார செயற்பாடுகளுக்குக் காசு இல்லாததன் காரணமாக யாரிடமோ முற்பணம் பெற்றுக் கொண்டதன் காரணமாகவா அரச மண்டபம் உடைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.
இந்த பிரச்சினைக்கு ஒருவாரத்திற்குள் பிரதமரால் பதிலளிக்க முடியாவிட்டால், கலாச்சார அமைச்சிலிருந்து அவர் விலகவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.