நெஞ்சுவலியில் இறந்ததாக கூறப்பட்ட பெண் ஒருவரின் பிரேத பரிசோதனையில் அது கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்கிளேயர் தோட்ட ஸ்டெலின் பிரிவில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் கடந்த 15 ஆம் திகதி இரவு நெஞ்சு வலியால் இறந்துள்ளதாக அவரது மருமகளால் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டது.
சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அந்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்ததற்கான தடையங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் தலவாக்கலை பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே தோட்டத்தை சேர்ந்த 2 குழந்தைகளின் தந்தையாவார்.
இதையடுத்து சந்தேக நபரை நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.