குளியாப்பிட்டி – ஹெட்டிபால – குபுராபொல பிரதேசத்தில் இம் முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் சிற்றூந்துடன் மோதுண்டு மிதி வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய (செவ்வாய்கிழமை) தினம் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த பிரதேசத்தினை சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிற்றூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் ஒருவரின் சிற்றூந்துடன் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.