பிரித்தானியாவில் இருந்து இலங்கை திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2764 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ள நிலையில் இதுவரை 2094 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.