வாக்குச் சாவடிகள் வழியாக கொரோனா பரவாது!

mahinda deshapriya 3
mahinda deshapriya 3

நாட்டில் கொரோனா வைரஸ் எந்த வகையிலும் வாக்குச் சாவடிகள் வழியாக பரவாது என்று மக்களுக்கு உறுதியளிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

மாகாண மற்றும் பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர்களின் ஆலோசனைகளுக்கு அமைய சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார குழுக்களினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சாவடிகள் தொற்று நீக்கம் செய்வது மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களினால் மேற்கொள்ளப்படுவதுடன் அதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை சுகாதார மருத்துவ அதிகாரிகள் வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.