வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பொதிகளை வீசிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைக்குள் பொதியொன்றை வீசுவதற்காக தயார் நிலையில் வைத்திருந்த போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு மதிலுக்கு மேலால் பொதிகளை வீசும் பிரதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து, ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 4 கையடக்க தொலைபேசிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.