மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஷாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் பல மில்லியன்களை மோசடி செய்த குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டிருந்தது.
மலேசிய அபிவிருத்தி சபையின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி அதிகளவு சொத்து குவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க நிதி மோசடி தொடர்பில் அவரிடம் சுமார் 16 மாதங்களுக்கு முன்பு விசாரணை ஆரம்பமாகிய நிலையில் இன்றைய தினம் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.