TNA யின் ஆதரவு – ரங்கே பண்டார கருத்து

6 ad 1
6 ad 1

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கே கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

கடந்த நான்கரை வருடங்கள் இந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் எந்த தரப்புக்கும் தெளிவானது. நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் பாரிய பிரயத்தனத்தை எடுத்துள்ளது. ஆட்கடத்தல், காணாமல் போதல், கொலை என்பன இல்லாத, நல்லிணக்க செயற்பாட்டை முன்னெடுத்த அரசாங்கமாக இந்த அரசாங்கம் விளங்குகின்றது.

இந்த பொதுக் கொள்கையை ஆதரிக்க தமிழ் தேசியக் கூட்டணிக்கு மட்டுமல்ல, பொதுஜன பெரமுனவிலுள்ளவர்களுக்கும் பொருத்தமான இடம் புதிய ஜனநாயக முன்னணிதான் எனவும் அவர் மேலும் கூறினார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.