கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு நேற்று (oct-18) உத்தியோகபூர்வமாக விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரியவை சந்தித்தார்.
பின்னர் இராணுவ தளபதிக்கு கிளிநொச்சி படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதி, படையினர் மத்தியில் உரை நிகழ்த்தியதுடன் இறுதியில் அங்குள்ள படையினர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.