மதுவரி ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட மூன்று குழுக்கள்!

05 3
05 3

போதை பொருள் மற்றும் போதை பொருள் விற்பனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மதுவரி அதிகாரிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மூன்று குழுக்கள் மதுவரி ஆணையாளரினால் நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் புத்தளம் – களப்பு அருகாமையில் ஐஸ் ரக போதை பொருள் 200 கிராத்துடன் மதுவரி அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைக்காக வடமேல் மாகாண பிரதிநிதித்துவப்படுத்தும் உதவி ஆணையாளர் இருவரின் கீழ் குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை பமுனுகம – நுகபே பிரதேசத்தில் போதை பொருள் மற்றும் எத்தநோலுடன் மதுவரி உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிரதி ஆணையாளரினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஒரு வார காலப்பகுதியில் குறித்த குழுக்களின் அறிக்கையினை ஆராய்ந்து பார்க்க எதிர்ப்பார்த்துள்ளதாக மதுவரி திணைக்களத்தின் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.