தனியார் முதலீட்டாளர்களுக்கு அதிகபட்ச வாய்ப்பு-புதிய நிதிக் கொள்கை

Sajith 3
Sajith 3

தனியார் தொழில் முதலீட்டாளர்களுக்கு பொருளாதாரத்தில் அதிகபட்ச வாய்ப்பை வழங்கும் அரச நிதிக் கொள்கை ஒன்றை உருவாக்க எதிர்ப்பார்த்துள்ளதாக நேற்று (Oct.18) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அதிகாரத்திற்கு வரும் எமது ஆட்சியினுள் அரச நிதிக்கொள்கை ஒன்று உருவாக்கப்படும்.

நாட்டினுள் தனியார் தொழில் முதலீட்டாளர்களுக்கு அதிகபட்ச வருமானம் ஈட்டும் வகையில் குறித்த நிதிக் கொள்கை தயாரிக்கப்படும். எமது பொருளாதார கொள்கை தேசிய தேவையை முழுமைப்படுத்தும் நோக்குடன் செயற்படுத்தப்படும்.

தற்போது உள்ள வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வரி முறையை சீர்திருத்துவதன் மூலம் தனியார் முதலீட்டாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.