போக்குவரத்து தடைகளை ஏற்படுத்தி வட்டுவாகல் பாலத்தில் இராணுவத்தினர் படப்பிடிப்பு!

IMG 4100 1
IMG 4100 1

இராணுவத்தின் வீர தீர செயல்களை பறைசாற்றும் விதமான படப்பிடிப்பு ஒன்று இராணுவத்தினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் முன்னெடுக்கபட்டமையால் அப்பகுதியூடான பொது போக்குவரத்தில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது.

பாலத்தில் எதிர் முனையில் கமெராக்களை பொருத்தி மறுமுனையிலிருந்து கனரக யுத்த வாகனங்கள் , ஆயுதம் தாங்கிய படையினரின் அணிகளை நகர்த்தி பாலத்தில் வைத்து படப்பிடிப்பு இடம்பெற்று வந்தமையால் இரு மருங்கிலும் படையினரால் வீதி தடைகள் போடப்பட்டு சிறிது நேரங்கள் பயணிப்பவர்கள் மறிக்க பட்டு படப்பிடிப்பு இடம்பெற்றது.

இதனால் முல்லைத்தீவு பரந்தன் வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபட்ட பொது மக்கள் சிரமங்களுக்கு உள்ளானதாக விசனம் தெரிவித்துள்ளனர் . தேர்தல் நாள் நெருங்கிவரும் நிலையில் படையினரின் இவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அச்ச உணர்வையும் ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது .