தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் வரலாறு காணாத மக்கள் கூட்டம் திரண்டிருக்க இன்று பிற்பகல் 5:30 மணியளவில் பருத்தித்துறை துறை முகம் அருகாமையில் மாவீர்கள் பெற்றோர்கள் ஈகை சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இந்த நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணையின் மகளிர் அணி செயலாளர் கிருபா கிரிதரன் தலமையில் இடம் பெற்றுள்ளது இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்புரை ஆற்றியுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் கிளி நொச்சி மாவட்ட வேட்பாளர்கள் அனைவரும் கலந்து உரை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஷ