பிரதான சந்தேக நபர் எஸ் எப் லொக்கா சுட்டு கொலை!

IMG 20200805 WA0046
IMG 20200805 WA0046

வசந்த சொய்சா கொலை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் இரான் ரணசிங்க எனப்படும் எஸ் எப் லொக்கா சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

எஸ் எப் லொக்கா மற்றும் அவரது காதலி சிற்றூந்தில் பயணித்து கொண்டிருந்த போது ,உந்துருளியில் பயணித்த அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி சூட்டில் எஸ் எப் லொக்காவின் காதலிக்கு எவ்வித ஆபத்துக்கும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எஸ் எப் லொக்கா தனது 32 வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது