ஹெரோயின் மற்றும் பணத்துடன் பெண் ஒருவர் கைது

cropped heroin 1

புறக்கோட்டை, பெத்தேகம பகுதியில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீகஹவத்த பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளுக்கு பின்னர் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரிடம் இருந்து சுமார் 7 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் 800 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.