ஒரு தொகை உலர்ந்த மஞ்சளுடன் நான்கு பேர் கைது!

download 14 3
download 14 3

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சளுடன் கற்பிட்டியில் நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி – தலுவ கடற்கரை பிரதேசத்தில் மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 14 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 750 கிலோ நிறையுடைய உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், சந்தேகநபர்கள் பயணித்த இரண்டு டிங்கி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு கைது செய்யப்பட்டவர்கள் 25 வயதுக்கும் 58 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் தொகை, இரண்டு டிங்கி படகுகள் மற்றும் சந்தேகநபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சின்னபாடு சுங்க அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த மூன்று வாரங்களில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 8360 கிலோவிற்கும் அதிகமான உலர்ந்த மஞ்சளை கடற்படை கைப்பற்றியதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.