போதைபொருள் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெயங்கொட ஹெட்டையா எனப்படும் நபர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த தீர்பு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் கடந்த 15 ஆம் திகதி மினுவாங்கொடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.