கொரோனா தொற்றிலிருந்து மேலும் 07பேர் குணமடைந்தனர்!

5 8

இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,805 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் மேலும் 07 கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 130 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 2,947 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.