கோப் குழுவின் அறிக்கை பாராளுமன்றில் இன்று சமர்ப்பிப்பு

cope
cope

23 நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகள் அடங்கிய கோப் (Cope) குழுவின் அறிக்கை இன்று (Oct.23) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2018ஆம் ஆண்டிற்கமைய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கோப் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை 23 நிறுவனங்கள் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்த அறிக்கையில் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.