1237 தேர்தல் சட்ட மீறல் முறைப்பாடுகள்

f
f

ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த தினத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் சட்ட மீறல் முறைப்பாடுகள் 1237 கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இவற்றில் 9 வன்முறைச் சம்பவங்களும், தேர்தல் விதிமுறைகளை மீறிய சம்பவங்கள் 1184 உம் வேறு முறைப்பாடுகள் 44 உம் காணப்படுவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் மாலை 4 வரையான 24 மணி நேர காலப் பகுதிக்குள் மாத்திரம் தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் குறித்த 103 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.