முல்லைத்தீவில் பண்டாரவன்னியன் சிலைக்கு அஞ்சலி!

IMG 8986
IMG 8986

முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த வெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றிகொண்ட வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 217ஆம் ஆண்டு வெற்றி நாளான இன்று(25), முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பண்டார வன்னியனின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தபட்டுள்ளது.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் பண்டாரவன்னியனின் திரு உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி நினைவுகூரல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன், கரைதுரைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சின்னராசா – லோகேஸ்வரன், மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, ஆகியோருடன் பெருந்திரளான மக்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

IMG 8788 1
IMG 8788 1
IMG 4880
IMG 4880
IMG 4884
IMG 4884
IMG 4882
IMG 4882