விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 46 தாய்மார்களுடன் 5 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் தங்கியுள்ளதால் குறித்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாடோ புள்ளேக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த குழந்தைகளை விடுவிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாடோ புள்ளே தலைமையில் குறித்த கலந்துரையாடல் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.