ஆயுர்வேத மருத்துவ துறையை நவீனமயப்படுத்த நடவடிக்கை

7 3

நாடளாவிய ரீதியில் காணப்படும் ஆயுர்வேத வைத்தியசாலைகளின் நிலைமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்க சுதேச மருத்துவம், கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகளின் அபிவிருத்தி மற்றும் சுகாதார இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி குறிப்பிட்டார்.

மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகளூடாக நிர்வகிக்கப்படும் சில ஆயுர்வேத வைத்தியசாலைகள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே, இது குறித்து முழுமையாக விசாரணை முன்னெடுக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஆயுர்வேத மருத்துவ துறையை நவீனமயப்படுத்த தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி சுட்டிக்காட்டியுள்ளார்.