வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுவலவத்த பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் 81 வயதான பெண்ணொருவர் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது .
தனது வீட்டிற்கு அருகிலிருந்த கிணற்றில் தவறுதலாக விழுந்ததிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.