கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி!

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 14
625.500.560.350.160.300.053.800.900.160.90 1 14

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுவலவத்த பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் 81 வயதான பெண்ணொருவர் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது .

தனது வீட்டிற்கு அருகிலிருந்த கிணற்றில் தவறுதலாக விழுந்ததிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.