இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது!

2
2

எதிர்வரும் 4 மாதங்களுக்காக நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை எவ்வித வாக்கெடுப்புமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வருடம் டிசம்பர் மாதம் வரையிலான 4 மாத காலப் பகுதிக்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்கு 1300 பில்லியன் ரூபாவுக்கு அதிகரிக்காத செலவீனங்களுக்காக அனுமதி கோரி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.