காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்ரா தொடர்பில்!

201711150400592646 At least five people killed in a shooting at a school in SECVPF
201711150400592646 At least five people killed in a shooting at a school in SECVPF

கைதுசெய்யப்பட்டிருந்த சந்தர்த்தப்பத்தில் தப்பிச் செல்வதற்கு முயற்சித்தபோது, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்ரா எனப்படும் இந்துநில் வஜித குமார தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரான சமயங் என்பவரின் பிரதான துப்பாக்கிதாரியான இந்ரா என அறியப்படும் வஜித குமார என்பவர், தப்பிச்செல்ல முயற்சித்தபோது நவகமுவயில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்ரா என்ற துப்பாக்கிதாரி, கண்டி – அங்கும்புற பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்தமை, ஹங்வெல்ல பகுதியில் நபர் ஒருவரை வாளினால் தாக்கி காயப்படுத்தியமை, கப்பம் கோரியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளதமை குறிப்பிடத்தக்கது.