கொரோனா பரவல் காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த மேலும் 287 இலங்கையர்கள் இன்று பிற்பகல் நாடு திரும்பியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஊடாக மத்தள விமான நிலையத்திற்கு அவர்கள் வருகை தந்துள்ளனர்.
மாலைத்தீவில் சுற்றுலாத்துறையில் பணியாற்றியவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
அவர்களை பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.