அம்பாறை கடற்பரப்பில் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பலில் தீ விபத்து!

12

அம்பாறை சங்கமன்கந்தைலிருந்து 38 கடல் மைல் தொலைவில் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எம்டி நியூ டயமண்ட் என்ற அந்த கப்பலின் பணியாளர்களை மீட்க கடற்படை ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த கப்பல் பனாமாவைச் சேர்ந்தது. இந்தியா செல்லும் வழியில் விபத்தை சந்தித்துள்ளது.

திருகோணமலை கடற்படைத் தளத்திலிருந்து இரண்டு கப்பல்களும், ஹம்பாந்தோட்டை கடற்படைத் தளத்திலிருந்து ஒரு கப்பலும் கப்பலின் பணியாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

கப்பலை கண்காணிக்க இலங்கை விமானப்படை பி -200 பீச் கிராஃப்ட் விமானம் அனுப்பப்பட்டுள்ளது.