கொழும்பு – மஹரகம விபத்தில் இருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!

13

கொழும்பு – மஹரகம, நாவின்ன சந்தியில், ஹைலெவல் வீதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ள விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அரச மரமொன்றுடன் குறித்த கார் மோதி விபத்திற்குள்ளானது.

நுகேகொடையிலிருந்து மஹரகம நோக்கி பயணித்த காரே இவ்வாறு விபத்திற்குள்ளானதுடன், சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை மீறி இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.