அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்திற்கு எதிர்ப்பினை வெளிக்கொணர ஐக்கிய மக்கள் சக்தி ஏகமனதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துவதோடு அதனை தோல்வியடையச்செய்ய நிபந்தனைகளுடனான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டுள்ளது.