சட்ட விரோத துப்பாக்கி பயன்படுத்துவோரின் தகவல் வழங்கினால் சன்மானம்; பொலிஸ் தலைமையகம்

7777777777
7777777777

சட்ட விரோதமாக துப்பாகிகள் உபயோகிப்பவர்கள் தொடர்பில் அறிந்தவர்கள் பற்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறியத்தருமாறு பொலிஸ் தலைமையகம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது .

இவ்வாறு தகவல்களை வழங்குபவர்களுக்கு 10,000 – 2,50,000 ரூபாய் வரை சன்மானம் வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரினால் சுற்று நிரூபம் மூலம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார் .

பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .