களுத்துறை- எலபடவத்த பகுதியில் கடற்றொழிலுக்காக சென்ற மீனவப் படகொன்று சீரற்ற வானிலை காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த இரண்டு மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
இதே நேரம் குறித்த இருவரும் களுத்துறை- நாகொட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .