திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வெலே சுதா என அறியப்படும் சமந்த குமாரவின் இளைய சகோதரி உள்ளிட்ட 3 பேர் கேரள கஞ்சாவுடன் ஹக்மன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹக்மன – உடுபில்லகொட பகுதியில் இறுதி சடங்கு ஒன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர், விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 5 கிராம் கேரள கஞ்சா காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.