வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்

222 1
222 1

மட்டக்களப்பு கரடியனாறு செங்கலடி பிரதான வீதி பங்குடாவெளி சந்தியில் பேரூந்துடன் மோட்டர்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர் .

விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

கரடியனாறு உறுகாமத்தில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி கரடியனாறு செங்கலடி வீதியில் பிரயாணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துடன் பங்குடாவெளி பகுதியில் இருந்து பிரதான வீதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பஸ்வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .