போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்கள் இருவர் உட்பட 5 பேர் கைது!

202001232036454318 4 youths arrested in contractor murder case near tiruchuli SECVPF 4
202001232036454318 4 youths arrested in contractor murder case near tiruchuli SECVPF 4

மன்னார் – உயிலங்குளம் – புதுக்குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் உட்பட 5 பேர் கைது இன்று 15 காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து உயிலங்குளம் புதுக்குடியிறுப்பு பகுதியில் இன்று அதிகாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 52 கிலோ கேரள கஞ்சா மற்றும் 920 கிலோ மஞ்சள், 17 இலட்சம் ரூபா பணம், லொறி மற்றும் டிரக்டர் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு விசேட அதிரடிப்படையினரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸாரினால் சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.