வவுனியா பன்றிகெய்தகுளத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

1111111 1
1111111 1

வவுனியா பன்றிகெய்தகுளத்தில் சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா பன்றிகெய்தகுளத்தில் வீடு ஒன்றில் சட்ட விரோதமாக துப்பாக்கி (இடியன்துவக்கு) ஒன்றினை மறைத்து வைத்திருப்பதாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து உபபொலிஸ் பரிசோதகர் அருளானந்தம் தலைமையிலான குழுவினரால் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டதுடன் அதனை தமது உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .