முள்ளியவளையில் குழு மோதல்! ஏழு பேர் காயம்!

attack 720x450
attack 720x450

முள்ளியவளை 01 ஆம் வட்டாரப் பகுதியில் உயிரிழந்த ஒருவரின் இறுதி நிகழ்வின் பின்னர் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் ஏழு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர் குழு ஒன்றிற்கு மற்றைய குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாகமாறி ககைலப்பாக மாறி வாள்வெட்டுவரையும் சென்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

காயமடைந்தவர்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.