காணாமல் போன மகளை தேடும் பெற்றோர் – பொலிஸ் முறைப்பாடு செய்தும் பலனில்லை!

01 1 6
01 1 6

வாகரைப் பிரதேசத்திலுள்ள ஜெயந்தியாய பகுதியில் வசிக்கும் சரீப்தீன் ஜென்னத்து வீவீ என்பவர் கடந்த மூன்று வருடமாக காணாமல் போன நிலையில் பல்வேறு இடங்களில் தேடியும், பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவரது தாயார் தெரிவித்தார்.

ஜெயந்தியாய பகுதியில் வசிக்கும் சரீப்தீன் ஜென்னத்து வீவீ (வயது 23) என்பவர் கடந்த 2017.12.29ம் திகதி வீட்டில் இருந்து காணாமல் போனதாக தாயார் தெரிவித்தார்.

குறித்த பெண் 18 வயதில் திருமணம் செய்து கணவருடன் மூன்று மாதம் வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு கணவன் வேறு திருமணம் செய்துள்ளதனால் மகள் தங்களுடன் வாழ்ந்து வந்ததாகவும்; கடந்த 2017.12.29ம் திகதி அதிகாலை 4 மணியளவில் பார்த்தபோது உறங்கிகொண்டிருந்த மகளை காணவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் மகள் அணிந்திருந்த ஆபரணங்களுடனும், கையடக்க தொலைபேசியுடனும் வீட்டில் இருந்து காணாமல்போன நிலையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் 2017.12.30ம் திகதி முறைப்பாடு செய்ததுடன், இவரது தொலைபேசி இலக்கத்தினையும் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதுவரையில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் காணாமல் போன தனது மகளை யாரவது கண்டறிந்தால், 0758304796 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு தாயார் வெள்ளத்தம்பி கசீனாஉம்மா (வயது 55) தெரிவித்தார்.