சில பகுதிகளுக்கு மழையுடனான காலநிலை தொடரும்

1569463953 rain 2

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

விசேட அறிவிப்பு: வடகிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிற்கு மேலாக விருத்தியடைந்த ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் நாளையளவில் பலவீனம் அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, வடகிழக்கு மற்றும் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (06N – 16N, 83E – 96E) அடுத்த சில நாட்களில் அவ்வப்போது பலமான அல்லது மிகப் பலமான காற்று வீசக்கூடுவதுடன் பலத்த மழைவீழ்ச்சியும் கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான கடலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட ஆழம் கூடிய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் 22 ஆம் திகதி வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என தொடர்ந்தும் மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை மற்றும் காங்கேசந்துறை ஊடாக புத்தளம் வரையானஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை மற்றும் காங்கேசந்துறை ஊடாக புத்தளம் வரையானகடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக அல்லது கொந்தளிப்பாகக்காணப்படும்.