வர்த்தக நிலையத்தில் கொள்ளையிட்டவர் கைது!

kaithu

கட்டுநாயக்கவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணத்தை கொள்ளையிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க – எவரிவத்த பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் பணத்தை கொள்ளையிட்ட பின்னர், அந்த வர்த்தக நிலையத்திற்கு தீ வைத்து சேதம் ஏற்படுத்தியதாக காவற்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்மூலம் குறித்த ஆடை வர்த்தக நிலையத்திற்கு 1.5 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. கைதானவர் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த ஆடை வர்த்தக நிலையத்தில் அவர் 80 ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.