வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட போரா 12 ரக இரு துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவிசாவெல்ல, வெலன்கல்ல பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன் மாவனெல்ல இலுக்கொட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ஒன்று பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.
சந்தேக நபரை கைதுசெய்வதற்காக கேகாலை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.