யாழில் சுற்றுலா துறை அபிவிருத்தி செயற்திட்டம் இன்று ஆரம்பம்!

IMG 8008
IMG 8008

சனச இண்டர் நேஷனல் நிறுவனம் கனடாவின் நிதி உதவியுடன் ,டி ஐ டி அமைப்பின் ஆலோசனையின் கீழ் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் உள்ளூர் சுற்றுலா துறையை  அபிவிருத்தி செய்யும் நோக்கில் ” சுற்றுலா துறை அபிவிருத்தி வெகுமதி சங்கிலி ” என்னும் செயற்திட்டத்தை இன்று(23) ஆரம்பித்துள்ளது.

ஆரம்ப நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ள தனியார் விடுதியொன்றில் வடக்கு மாகாண  ஆளுநர் திருமதி பி. எஸ். எம் சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.

மேலும்  கொரோனாவுக்கு பின்னர் உணவகம் மற்றும் விடுதிகளின் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கை தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வும் இடம்பெற்றது .அத்துடன் விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கான  கொரோனா பாதுகாப்பு உபகாரணங்களும் இதன் போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில்  சனச இண்டர் நஷனல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சமடணி கிரிவந்டெனிய,,சனச அபிவிருத்தி வங்கியின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர ,நிகழ்ச்சி திட்ட தலைவர் ஹர்ஷி அபேநாயக்க ,உட்பட விடுதி ,உணவகம் மற்றும் சுற்றுலா கற்கை நெறியை விளக்கும் நிறுவன பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.