ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி!

Maithripala Srisena
Maithripala Srisena

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய கவுன்ஸிலருடன் இன்றும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாட்சி விசாரணைகளை செவிமடுப்பதற்காக அவர் இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

அவர் நேற்றைய தினமும் சாட்சி விசாரணைகளை செவிமடுப்பதற்காக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.